அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
அடேங்கப்பா! தயாரிப்பாளருக்காக நடிகை தீபிகா படுகோனே செய்த தியாகத்தை பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!
அடேங்கப்பா! தயாரிப்பாளருக்காக நடிகை தீபிகா படுகோனே செய்த தியாகத்தை பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் அடுத்ததாக மகாநடி படத்தைத் தயாரித்த அஷ்வினி தத் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் வெளியிட முடியாமல் முடங்கியுள்ளன.
அதனால் திரையுலக தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வருமானம் இழந்து பொருளாதார ரீதியாக பெருமளவில் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடிகை தீபிகா படுகோனே, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கும்போதே பெற்றுக்கொள்ளும் அட்வான்ஸ் பணம், தனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் பலரும் தீபிகா படுகோனேவை வாழ்த்தி வருகின்றனர்.