என்னது.. வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் பாலிவுட் நடிகையா! கௌதம் மேனன் போட்டுடைத்த உண்மை!!

என்னது.. வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் பாலிவுட் நடிகையா! கௌதம் மேனன் போட்டுடைத்த உண்மை!!



deepika-padukone-first-selected-for-varanam-aayiram-mov

கடந்த 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அதாவது படத்தில் சூர்யா அப்பா, தந்தை என இரு கதாபாத்திரங்களிலும் அசத்தலாக நடித்திருப்பார்.

மேலும் அதில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். புதுவிதமான காதல் கோணத்தில் உருவான இப்படத்திற்கு அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி கேட்கப்படுகிறது.

Varanam aayiram

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா நடித்த அப்பா கதாபாத்திரத்தில் முதலில் மலையாள நடிகரான மோகன் லால் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பின்னர் அதில் சூர்யாவே நடித்துவிட்டாராம். அதேபோல் மேக்னா கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லையாம். அதன் பின்னரே சமீரா ரெட்டி மேக்னா கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். இதனை பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.