பாடகி சின்மயி இப்படி கூறலாமா? மூடிட்டு போ என்று! எதை நம்புவது? மக்கள் குழப்பம்!

பாடகி சின்மயி இப்படி கூறலாமா? மூடிட்டு போ என்று! எதை நம்புவது? மக்கள் குழப்பம்!


chinmayi talking wrongly

கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது.

இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் எழுந்துள்ளன, குறிப்பாக 13 வருடத்துக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் கூறவேண்டும் என பிரபலங்கள் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், “தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் அது பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்” என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.

இதற்கு பதிலடியாக, “எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ” என்று பதிலடி கொடுத்துள்ளார்.