சென்னை வந்ததும்.. மறக்காமல் ஷாருக்கான் செய்த செயல்.. நெகிழ்ச்சியில் நயன்.!

சென்னை வந்ததும்.. மறக்காமல் ஷாருக்கான் செய்த செயல்.. நெகிழ்ச்சியில் நயன்.!



bollywood-badshah-sharukh-khans-surprise-for-nayan-and

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் வெற்றிகரமாக  திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்துள்ள இந்த திரைப்படம் கடந்த சில காலங்களாக தோல்வியின் முகத்தில் இருந்த  பாலிவுட் சினிமாக்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து  ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜவான். இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின்  முன்னணி அட்லி  இயக்கி வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

nayanthara

தமிழ் சினிமாவில் ராஜா, ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தளபதி விஜயை வைத்து மெர்சல், பிகில், தெறி என  அட்டகாசமான வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில்  தற்போது ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜவான். இத்திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு, சன்னி குரூவர் போன்ற நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

nayanthara

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக  சென்னை வந்துள்ள ஷாருக்கான் நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்துள்ளார். நயன்தாராவின் குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாருக்கான் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். படப்பிடிப்பின் போதே குழந்தைகளை பார்க்க வருவதாக கூறியிருந்த ஷாருக்கான் சென்னை வந்ததும் மறக்காமல் தங்கள் குழந்தைகளை பார்க்க வந்தது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சம்பவம்  சர்ச்சையை கிளப்பியது.