வீடு தரகரை ஏமாற்றியதாக வந்த புகார்; பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்

வீடு தரகரை ஏமாற்றியதாக வந்த புகார்; பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்



bollywodd-actress-talks-about-house-broker-cases

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

bollywood actress

இவர் வீடு தரகரை ஏமாற்றியதாக வந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.

ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

bollywood actress

“பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.