லொஸ்லியாவுக்கு கிடைத்த பதவி- இறுதியில் அவர் எடுத்த முடிவு!

லொஸ்லியாவுக்கு கிடைத்த பதவி- இறுதியில் அவர் எடுத்த முடிவு!



Big boss3 today promo

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது போது தான் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. மக்களும் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் சீக்ரெட் அறைக்கு அனுப்பப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. மேலு‌ம் பிக்பாஸ் வீட்டில் இன்று தலைவர் போட்டிக்கான தேர்வு நடைபெறுகிறது.

அதில் வனிதா, லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால் முதலில் வனிதா என்னால் முடியாது விட்டு கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார். அதனை தொடர்ந்து தர்ஷனும் என்னால் முடியவில்லை என்று கூறி சென்று விடுகிறார். இறுதியில் வெற்றி பெற்ற லாஸ்லியா எனக்கு தலைவர் பதவி தேவையில்லை என கூறுகிறார்.