ஷிவானிக்காகத்தான் என் மனைவியை பிரிந்தேனா! முதன்முதலாக உண்மையை உடைத்த பகல்நிலவு அசீம்!
ஷிவானிக்காகத்தான் என் மனைவியை பிரிந்தேனா! முதன்முதலாக உண்மையை உடைத்த பகல்நிலவு அசீம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அசீம். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து இருவரும் கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் ஒன்றாக நடித்தனர். ஆனால் ஒரு சில காரணத்தினால் ஷிவானி பாதியிலேயே தொடரை விட்டு விலகினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார்.
பின்னர் அதனிலிருந்தும் பாதியிலேயே விலகிய ஷிவானி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இந்த நிலையில் ஷிவானிக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய அவர் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை சென்றார். இதற்கிடையில் சமீபத்தில் பகல் நிலவு சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த நடிகர் அசீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஷிவானியுடன் ஏற்பட்ட காதல் காரணமாகதான் அவர் மனைவியை விவாகரத்து செய்தார் எனவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அசீம், எனது விவாகரத்துக்கும், ஷிவானிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் எங்கள் இருவருக்கும் இல்லை. நான் எனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். அவரை நிம்மதியாக விடுங்கள். என்னையும் நிம்மதியாக நடிக்க விடுங்கள் என கூறியுள்ளார்.