திருடர்களுக்கு ஆதரவு கொடுப்பவர் ரஜினிகாந்த்.. ரஜினிகாந்த்தை சரமாரியாக விமர்சித்த ரோஜா.?

திருடர்களுக்கு ஆதரவு கொடுப்பவர் ரஜினிகாந்த்.. ரஜினிகாந்த்தை சரமாரியாக விமர்சித்த ரோஜா.?



Andra minister roja controversial talk about rajinikandh

தமிழ் சினிமாவில் பிரபலமாக நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.

Roja

சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக திரைப்படம் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

இதுபோன்ற நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதன்படி தற்போது ஆந்திரா முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சமீபத்தில் கைதாகியுள்ளார்.

Roja

இதனையடுத்து சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். மேலும் நடிகையும், ஆந்திரா அமைச்சருமான ரோஜா, ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.  "திருடர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பவர் ரஜினிகாந்த். இவ்வாறு ரஜினிகாந்த் அரசியல் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மதிக்க மாட்டார்கள்" என்று கடுமையாக வசைப்பாடி உள்ளார். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.