'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட இயக்குனர் மீது பாலியல் புகார்.! நடிகை அளித்த பரபரப்பு குற்றச்சாட்டு.!

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட இயக்குனர் மீது பாலியல் புகார்.! நடிகை அளித்த பரபரப்பு குற்றச்சாட்டு.!



An actress places sexual allegations on Manjumel boys film Director

இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கிய 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.  படத்தின் வெற்றியை அப்பட குழுவினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பிராப்தி எலிசபெத் என்ற மலையாள நடிகை இயக்குனர் சிதம்பரத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

Manjumel boys

தனது சமூக ஊடகத்தில், அந்த இயக்குனர் தனக்கு கொடுத்த பாலியல் துன்புறுத்தல்களை பற்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சிதம்பரத்தின் முதல் திரைப்படமான 'ஜன்.இ.மன்' படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் பிராப்தி எலிசபெத் நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது, இயக்குனர் சிதம்பரம் தனக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தத் திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நெட்டிசன்கள் இடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 

Manjumel boys

மூன்று வருடம் வரை எதுவும் கூறாத நடிகை தற்போது 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டை வைத்ததற்கான பின்னணி என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அந்த நடிகைக்கான ஆதரவு கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அந்த நடிகை இந்த புகாரை குறித்து தெரிவித்த நேரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.