பிரசவத்திற்கு பிறகு, முதன்முறையாக ரசிகர்களிடம் பேசிய ஆலியா! என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

பிரசவத்திற்கு பிறகு, முதன்முறையாக ரசிகர்களிடம் பேசிய ஆலியா! என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


alya-answered-to-fan-question

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் ராஜாராணி. இதில் ஹீரோவாக கார்த்தி கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். மேலும் செம்பா கதாபாத்திரத்தில், ஹீரோயினாக ஆலியா மானசா நடித்தார். அந்த தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 

அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த ஆலியாவிற்கு அண்மையில் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆர்ஷ் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா அவ்வப்போது தனது மகளுடன் இருக்கும் க்யூட்டான வீடியோக்கள் மற்ற புகைப்படங்களை பகிர்வர்.

இந்த நிலையில் குழந்தை பிறந்ததற்கு பிறகு முதல்முறையாக ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், ஆர்ஷ் பார்ப்பதற்கு யார் மாதிரி இருக்கிறார்? என கேட்டதற்கு, தன்னைப் போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளின் பெயர் அர்த்தம் கேட்டதற்கு, ஐலா என்றால் நிலாவெளிச்சம் என்றும், அர்ஷ் என்றால் ஹீரோ என்றும் பதில் அளித்துள்ளார். மேலும் தனக்கு அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தை பிறந்ததாகவும் விரைவில் ஐலா மற்றும் ஆர்ஷ் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவையும் வெளியிட உள்ளதாகவும் ஆலியா தெரிவித்துள்ளார்.

alya

alya