தயவுசெய்து அப்படி பேசாதீங்க! வாழவே பயமா இருக்கு! கண்ணீருடன் நடிகை ரக்ஷிதா வெளியிட்ட வீடியோ! செம ஷாக்கில் ரசிகர்கள்!

தயவுசெய்து அப்படி பேசாதீங்க! வாழவே பயமா இருக்கு! கண்ணீருடன் நடிகை ரக்ஷிதா வெளியிட்ட வீடியோ! செம ஷாக்கில் ரசிகர்கள்!


actress-rakshitha-request-to-stop-spreading-rumour-abou

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  

இந்நிலையில்  நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.  மேலும் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சரவணன் மீனாட்சி மற்றும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து நடிகை ரக்ஷிதா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

chitra

அதில் அவர். சித்ராவை பற்றி அவர் இல்லாத இந்த நேரத்தில் தவறாக பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அவர் தற்போது இல்லை என்பதை எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.அவருடைய இனிமையான நினைவுகளோடு வாழ முயற்சி செய்கிறோம். இந்நிலையில் அவரைப்பற்றி விதவிதமாக கதை கட்டிக்கொண்டிருப்பது கஷ்டமாக உள்ளது. சித்ரா போன்ற கடின உழைப்பாளியை இழந்தது நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.

பல நடிகைகளின் வாழ்க்கை இப்படிதான் இருக்கிறது. வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் மனதிற்குள் ஒருவிதத்தில் பயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதனால் தயவு செய்து நடிகைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்து கொண்டு வதந்தியை பரப்பாதீர்கள். அவ்வளவு தைரியமான பொண்ணுக்கே இந்த நிலைமை என்றால் நாங்களெல்லாம் என்ன செய்வது? மேலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என சிலரும், சமூக வலைதளங்களில், வெளியே வந்தால் அங்கே பலரும் எங்களை நெருக்கும்போது வாழவே பயமாக இருக்கிறது என்று கண்ணீர்விட்டு கூறியுள்ளார்.