நேற்று மாலை வரை இல்லை! ஆனா.. நடிகை குஷ்பு வெளியிட்ட ஷாக் தகவல்! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

நேற்று மாலை வரை இல்லை! ஆனா.. நடிகை குஷ்பு வெளியிட்ட ஷாக் தகவல்! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!


actress-kushbu-tested-corono-positive

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை குறையாமல் ஆட்டிபடைத்து வருகிறது. இந்த கொடிய தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சிலர் உயிரிந்த துயரமும் நேர்ந்தது. மேலும் இடையில் சற்று குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் 3வது அலையாக பரவ துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கொரோனோ பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்புவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 2 அலைகளில் தப்பித்த நிலையில், தற்போது மூன்றாவது அலை என்னை பிடித்துவிட்டது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா தொற்று இல்லை. மூக்கு ஒழுகல் இருந்ததால், மாதிரிகளை பரிசோதனைக்கு  அனுப்பினேன். அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டநிலையில் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பதை மிகவும் வெறுக்கிறேன். என்னை அடுத்த 5 நாட்களுக்கு உற்சாகப்படுத்துங்கள். அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் குஷ்பு குணமடைய பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.