"கால் செய்தால் அந்த விஷயத்திற்கு எப்போ வேணும்னாலும் நான் ரெடி தான்" நடிகை கிரண்னின் சர்ச்சை பதிவு..

"கால் செய்தால் அந்த விஷயத்திற்கு எப்போ வேணும்னாலும் நான் ரெடி தான்" நடிகை கிரண்னின் சர்ச்சை பதிவு..



actress-kiran-controversy-post

ஒரு காலத்தில், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித், விக்ரம், கமல் ஆகியோருடன் நடித்து, மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை கிரண். சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்திலேயே, திடீரென்று இவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

kiran

கிரண் ரத்தோட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர், இப்போது தன் குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இவர் போட்ட பதிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

அதில் அவர், "நான் தொடர்ந்து ஐந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்தேன். ஆனால் அதன்பிறகு, யாரும் என்னை தங்கள் படங்களில் புக் செய்யவில்லை. இப்போதும் நான் நடிக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். அதே போன் நம்பர் தான் வைத்திருக்கிறேன்.

kiran

கால் செய்து என்னை மீட் செய்யலாம். பட வாய்ப்பு தருவதற்கு மட்டும் என்னை அழையுங்கள். சும்மா டின்னர் சாப்டியா என்று கேட்பதறகாகவெல்லாம் என்னை அழைக்காதீர்கள்" என்று கூறியிருந்தார்.