சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா நயன்?? பிரபல நடிகை வெளியிட்ட பதிவால் சர்ச்சை!!



actress-kasthuri-tweet-about-surrogacy-panned-in-india

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதியில் தரிசனம் தொடர்ந்து ஹனிமூன் என இருவரும் பிஸியாக இருந்தனர்.

அவர்கள் நெருக்கமாக, ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் அவ்வப்போது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. நயன்தாராவும், நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம் என கூறியுள்ளார். இந்த நிலையில் திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை? வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனரா? என பல கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத சில காரணங்கள் இருப்பவர்களை தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து வரும் நாட்களில் நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நயனுக்கு ஏதாவது உடல்நல பிரச்சினை உள்ளதா?? அவர் சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்