காதல் மனைவியுடன் தகராறு! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகர்! அதிர்ச்சி சம்பவம்!

காதல் மனைவியுடன் தகராறு! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகர்! அதிர்ச்சி சம்பவம்!


actor-thennarasu-committed-suicide-for-family-issue

கடந்த 2011 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஓவியா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெரினா. இந்தப் படத்தில் தென்னரசு என்பவர் நடித்திருந்தார்.  அவர் அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் நடிகர் தென்னரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் தென்னரசு அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Thennarasu

இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த தென்னரசு தன் வீட்டில் ஃபேனில்
 தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தென்னரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.