இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!

இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!



Actor Sethuraman wife emotional post viral

தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அதனை தொடர்ந்து அவர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் மருத்துவரான அவர் கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக சரும நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையை திறந்தார். நடிகர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சேதுராமன் காலமானார்.

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி 5மாதம் கர்ப்பமாக இருந்தார். பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது உமா சேதுராமன் பயன்படுத்திய வாசனை திரவியம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இன்று  எமோஷன் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நிமிடம் நீங்கள் எனதருகில் இருப்பதை போல என் மூளை உணர்ந்தது. நான் உங்களை தேட துவங்கினேன். பின்தான் தெரிந்தது நீங்கள் என்னுள்தான் இருக்கீறீர்கள் என்று.

 நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை உங்களது வாசனை திரவியம் என்னை மீண்டும் உங்களிடம் அழைத்துச் சென்றது. வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. ஆனால் நாம் நிச்சயமாக அதனை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.