மாமியாரின் பெயரில் ரூ.1 இலட்சம் நன்கொடை செலுத்திய ரன்பீர் கபூர்: வெளியான அசத்தல் தகவல்.!

மாமியாரின் பெயரில் ரூ.1 இலட்சம் நன்கொடை செலுத்திய ரன்பீர் கபூர்: வெளியான அசத்தல் தகவல்.!



Actor ranbir kapoor donate 1 lakh with her Mother in law name

 

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ரன்பீர் கபூர். கடந்த 2022-ம் ஆண்டு இவர் முன்னணி இந்தி நடிகையான ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

இருவரின் அன்புக்கும் அடையாளமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய குழந்தையும் பிறந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று தனது குழந்தையை பொதுவெளிக்கு ஊடகங்களின் முன்பு காண்பித்திருந்தார். 

Latest news

இந்த நிலையில், இவர் தனது மாமியாரின் பெயரில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷயம் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நலத்திட்ட பணிக்காக ரன்பீர், தனது மாமியார் பெயரில் நிதி உதவியை வழங்கியிருக்கிறார்.

சமீபத்தில் சந்திப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து வெளியான அனிமல் திரைப்படம் சர்வதேச அளவில் ரூ.800 கோடியை கடந்து வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.