யாருக்காகவும் செய்யாததை மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக செய்த அஜித்! என்ன செய்தார் தெரியுமா?

யாருக்காகவும் செய்யாததை மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக செய்த அஜித்! என்ன செய்தார் தெரியுமா?


Actor ajith participated in sridevi thithi function

சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் பெரும்பாலான நடிகர் நடிகைகள் பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், தல அஜித் மட்டும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை. அவ்வளவு ஏன்? அவர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் இப்படி எதிலும் கலந்துகொள்ளது இல்லை.

ரசிகர்களின் பாச தொல்லைகளை தவிர்க்கவே அஜித் பொது இடங்களுக்கு வருவது இல்லை, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் விழாவிற்கு வந்துள்ளார் அஜித்.

Ajith Kumar

கடந்த வருடம் துபாய்க்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கிருந்த குளியலறையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அஜித்தும், ஸ்ரீதேவியும்  இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படப்பிடிப்பில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த சமயம் அஜித், ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியின்படி போனிகபூர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஜீத்.

அதில் முதல் படமான ‘பிங்க்’ ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியின்  முதலாம் ஆண்டு  நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு  இன்று காலை நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

Ajith Kumar

இந்த நிகழ்வு திரையுலக பிரபலங்கள் யாருக்கும் தெரிவிக்கப்படாத நிலையில்  நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொண்டார். அவர் வந்த சில நிமிடங்கள் கழித்து அஜீத்தின் மனைவி  ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவிக்கு திதி  வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் நடிகர் அனில் கபூர், ‘பிங்க்’ ரீமேக் பட இயக்குநர் ஹெச்.விநோத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.