"ஆசிட் வீசிடுவேன்" காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்..!
ஆசிட் வீசுவதாக பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தன்னுடன் காதல் வயப்பட்ட மறுத்தால் கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டுநர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, காளாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஹரி (வயது 27). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். காட்பாடி பகுதியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!
காதல்:
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஜோடி பிரிந்து இருந்துள்ளது.
வற்புறுத்தல்:
இதனிடையே, சில நாட்களாகவே ஹரி இளம்பெண்ணை பின்தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரின் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
கைது:
இதனால் பயந்துபோன இளம்பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!