பெண்களின் பல நாள் எதிர்பார்ப்பு.... மகளிர் உரிமைத் தொகை உயர்வு உறுதியானது..! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!!
மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். விரைவில் உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொடக்கக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
தொடக்கக்கட்ட பணிகள் தீவிரம்
அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார். தேவையான நிர்வாக நடைமுறைகள் நிறைவடைந்ததும், உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டைச் சுற்றிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி
நிதிச்சுமை காரணமாக வரவிருக்கும் பட்ஜெட்டில் உரிமைத் தொகை உயர்த்தப்படாது என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. இந்த சூழலில், அமைச்சரின் அதிகாரப்பூர்வ விளக்கம் அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பயனாளிகளிடம் அதிகரித்த எதிர்பார்ப்பு
அமைச்சரின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.2,500 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்ற தகவலால், திட்டத்தின் பயனாளிகளிடையே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை 2,500 எப்போது? CM விஜய் பிறந்தநாளில் எதிர்பார்த்த மக்கள்... வெளியான முக்கிய தகவல்..!!!