ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
Dharmapuri News: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு காதல் தொல்லையுடன் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவி:
தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி, தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் நபிஷா (வயது 48) என்ற ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் பிற மாணவிகளைப்போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!
ஆபாச கடிதம்:
இதனிடையே, பள்ளி மாணவியை ஆபாசமாக கவனித்த ஆட்டோ ஓட்டுநர் நபிஷா, சிறுமிக்கு காதல் கடிதம் வழங்கி இருக்கிறார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஆபாசமான வர்ணனையுடன் காதல் கடிதத்தை கொடுத்து இருக்கிறார்.
புகார்:
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், நபிஷாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.!