×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

போதைக்காக ஊசி செலுத்திக்கொண்டவர் உயிரிழந்தார். 

Advertisement

ஊசி மூலம் உடலில் போதை மருந்து செலுத்தும் பழக்கம் கொண்டவர் மரணம் அடைந்தார். 

போதை அடிமை: 

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் மது-கஞ்சா போதைப்பொருட்கள் பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மேலும், போதை மாத்திரைகளை கரைத்து ஊசி கொண்டு செலுத்தும் பழக்கத்தையும் வைத்துள்ளார். 

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.! 

உடல்நலம் பாதிப்பு: 

இவ்வாறாக தொடர்ந்து கேடான பழக்கத்தை தொடர்ந்து வந்த காரணத்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். போதை ஊசி பழக்கம் காரணமாக அவரின் நரம்புகளும் தளர்வடைந்தனர். 

மரணம்: 

இதற்காக மருத்துவமனையில் தொடர் & தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சோதனை & தடுப்பு நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.. கொலை வழக்கால் நடந்த சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #chennai #Drugs Injection
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story