×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. பழனியில் மக்கள் அச்சம்.. கொடூர கொலை.! 

Palani News: நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

Advertisement

பழனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

மூதாட்டி: 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம் பகுதியில் வசித்து வருபவர் ராமுத்தாய் (வயது 83). இவரின் கணவர் நடராஜன் இறந்துவிட்டார். தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில், திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.! 

தனியாக இருக்கிறார்: 

இதனால் மூதாட்டி ராமுத்தாய் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை நேரத்தில் அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. வீட்டின் கதவுகளும் திறந்திருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராமுத்தாய் பேச்சு-மூச்சின்றி இருந்துள்ளார். 

விசாரணை: 

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நேரில் வந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் ராமுத்தாயின் 7 சவரன் தங்க நகைகள் மாயமாகியது உறுதியானது.

கொலை: 

அவரின் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததால், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #palani #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story