தவெக ஆட்சி அமைக்க திமுக ஒருபோதும் தடையாக இருக்காது..! ஆனால் ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்.. ஆடிப்போன விஜய்! அடுத்து விஜய் என்ன செய்யப்போறாரு..?
தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பு முயற்சியில் பெரும்பான்மை சிக்கல் நீடிக்கிறது. விஜய்யின் பதவியேற்பு தள்ளிப்போன நிலையில் ஸ்டாலின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பு முயற்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்திருந்தார். ஆனால் பெரும்பான்மை எண்ணிக்கையை நிரூபிப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, இன்று நடைபெறவிருந்த விஜய் பதவியேற்பு விழா தள்ளிப்போயுள்ளது.
112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே?
தகவலின்படி, ஆட்சியமைக்க உரிமை கோரி விஜய் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், கூடுதல் ஆதரவு பட்டியல் வழங்குமாறு ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு..... ஆளுநருக்கு விஜய் அனுப்பிய இரண்டாவது கடிதம்! மே 7ல் நடக்க போவது என்ன? ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்பில்...!!!
இதையடுத்து, தவெக நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் குழு மீண்டும் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தனர். அதன்பின் அரசியல் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், இதுவரை ஆளுநரிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வராததால் பதவியேற்பு நிகழ்ச்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் பேட்டி அரசியலில் பேசுபொருள்
இந்த சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தவெக அரசு அமைந்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த வித இடையூறும் தராமல் திமுக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குறுதிகள் குறித்து ஸ்டாலின் கருத்து
தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சவாலான விஷயம் என அவர் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் திமுக அரசு வழங்கியதைப் போல 1,000 ரூபாயையாவது வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். தற்போது தவெக தரப்பின் பெரும்பான்மை நிரூபிப்பு மற்றும் ஆளுநரின் அடுத்தகட்ட முடிவை எதிர்நோக்கி தமிழக அரசியல் காத்திருக்கிறது.