வெளிநாட்டு பயணம் முடிந்த கையோடு இடைத்தேர்தலில் விஜய் எடுத்த அதிரடி முடிவு! பரபரக்கும் அரசியல் களம்...!!!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள்.
இதையும் படிங்க: அமைச்சர் சரத்குமாருக்கு கல்தா... பழைய வீடியோவால் வந்த வினை! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! இடைத்தேர்தல் அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!!!
அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உள்ளூர் அளவில் நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்காதது தொடர்பாக அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு தொகுதிகளிலும் நேரடி களப்பணி
இந்த சூழலில், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரத்தை விட கூடுதல் நாட்கள் களத்தில் இருக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய திட்டத்தின்படி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
செப்டம்பர் இறுதியிலும், அக்டோபர் தொடக்கத்திலும் இந்த பிரசாரப் பயணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரு தொகுதிகளுக்கும் தவெக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐந்து முனைப் போட்டியால் அதிகரிக்கும் பரபரப்பு
இரண்டு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என பல்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
தவெக சந்திக்கும் முக்கியமான இடைத்தேர்தலாக இது அமைந்துள்ளதால், கட்சியின் முழு நிர்வாக அமைப்பும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் விஜய் பிரசாரம் அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கைகளில் முக்கிய கவனம் பெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
இதையும் படிங்க: ஒரே முடிவால் ஒட்டுமொத்தமாக மாறிய தேர்தல் கணக்கு! CM விஜய்க்கு செக் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்...!!!