ஒரே முடிவால் ஒட்டுமொத்தமாக மாறிய தேர்தல் கணக்கு! CM விஜய்க்கு செக் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்...!!!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPI-M தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதால் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) ஆகியவை தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கணக்குகளைத் தாண்டி, தங்களது கொள்கை மற்றும் அரசியல் அடையாளத்தை முன்னிறுத்தும் இந்த முடிவு, தேர்தல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அதே நேரத்தில் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக களம் காண்பது கவனம் பெற்றுள்ளது. ஆளும் தரப்பின் கொள்கைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிய விவகாரம் மற்றும் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்ள இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் வந்த முதல் ஆப்பு! சந்திப்பை மறுத்த அன்புமணி? பின்னணியில் இருக்கும் தவெக... தலைகீழாக மாறிய இடைத்தேர்தல் ஆட்டம்..!!!
தவெகவை எதிர்த்து களமிறங்கும் இடதுசாரிகள்
நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக மாற்ற இடதுசாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். தனியார்மயமாக்கல், போதைப்பொருள் கட்டுப்பாடு, தொழிலாளர் உரிமைகள் போன்ற விவகாரங்களும் பிரசாரத்தில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஆளும் கட்சிக்கு எதிரான கொள்கை ரீதியான கேள்விகள் தேர்தல் களத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சியே குறிப்பிட்ட தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது, தவெக மற்றும் இடதுசாரிகளின் எதிர்கால அரசியல் உறவு குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக, அதிமுக வாக்கு கணக்கில் தாக்கம் ஏற்படுமா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனிப்போட்டி திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் கணக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கொள்கை சார்ந்த வாக்காளர்களிடையே ஆதரவு பிரியும் பட்சத்தில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகளில் அதன் தாக்கம் தெரியக்கூடும்.
குறிப்பாக திமுகவுடன் கடந்த காலங்களில் தோழமையுடன் இருந்த இடதுசாரிகள் தனியாக களமிறங்குவது, கூட்டணி வாக்கு பரிமாற்றம் தொடர்பான அரசியல் கணக்குகளை மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தவெக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான போட்டியாளர்களின் தேர்தல் வியூகத்திலும் எதிரொலிக்கலாம்.
மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தும் பிரசாரம்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் உள்ளூர் மக்களின் அன்றாட தேவைகள், வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பிரச்சினைகள் முக்கிய பேசுபொருளாக உள்ளன. அந்த விவகாரங்களை முன்வைத்து இடதுசாரிகள் மேற்கொள்ளும் பிரசாரம், தேர்தலை வெறும் கட்சி போட்டியாக இல்லாமல் கொள்கை சார்ந்த விவாதமாக மாற்றும் வாய்ப்புள்ளது.
அதனால், இந்த இடைத்தேர்தல் வெற்றி, தோல்வி என்ற கணக்கைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனிப்போட்டி எந்த அளவுக்கு வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் வெளிப்படுத்தும் களமாக மாறியுள்ளது. அதேபோல், தவெக அரசியல் கணக்கு மற்றும் பிற பிரதான கட்சிகளின் வியூகங்களில் இந்த முடிவு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதிரடி உத்தரவால் அனல் பரக்கும் அரசியல்...!!!