அடுத்த பரபரப்பு... தமிழக MP-க்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் விஜய்!!!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தின் உரிமைகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.
அனைத்து எம்பிக்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் அனைத்து எம்பிக்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தகவலின்படி, தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பது மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டசபையில நாளைக்கு தான் சம்பவமே இருக்கு! பதில் சொல்ல ரெடியா இருங்க விஜய்..... விளாசி தள்ளிய எதிர்க்கட்சித் தலைவர்.!!!
ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னை கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து எம்பிக்களின் கருத்துகளையும் கேட்டு, தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஒருமித்த அணுகுமுறையை உருவாக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
இதையடுத்து, மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்ற அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.