மாமியார்–மருமகள் சண்டை.. நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்? வைரலாகும் வீடியோ!
மாமியார்–மருமகள் சண்டை.. நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்? வைரலாகும் வீடியோ!
மாமியார்–மருமகள் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மருமகளை தாக்கிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தன்று, கொழுந்தனின் நடவடிக்கை குறித்து மருமகள் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவருக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், குடும்பத்தினர் சிலர் சேர்ந்து மருமகளை தாக்கியதாகவும், வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்.. அறையில் கேட்ட அழுகை சத்தம்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி!
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான கொழுந்தனும் மருமகளை தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னை தாக்க வேண்டாம் எனக் கதறியபோதும், தாக்குதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தாக்குதல் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாகவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்.. உறவினர் என நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!