என்ன ஒரு கொடுமை இதெல்லாம்...! உயிருக்கு போராடும் பெண்ணை காப்பாற்ற நீரில் குதித்த இளைஞர்! கரைக்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.... அதிர்ச்சி சம்பவம்..!!!
உத்தரப்பிரதேசத்தில் தண்ணீரில் மூழ்கிய பெண்ணை உயிரைப் பணயம் வைத்து தொழிலாளி ஒருவர் மீட்ட நிலையில், கரையில் வைத்திருந்த அவரது மொபைல் மற்றும் பணம் திருடப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய பெண்ணை, கரையில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு இளைஞர் துணிச்சலுடன் மீட்டார். அருகிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் அந்தத் தொழிலாளி, சிறிதும் தயங்காமல் தண்ணீரில் குதித்தார். ஆனால், பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்குத் திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உயிரைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்த தொழிலாளி
பெண் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்ததும், அந்த இளைஞர் உடனடியாக தனது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கினார். ஆபத்தைப் பொருட்படுத்தாமல் போராடிய அவர், பெண்ணை பிடித்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காதலருடன் செல்ல விரும்பிய மனைவி.. மனதை மாற்றாமல் கணவர் எடுத்த விநோத முடிவு!
கரைக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி
பெண்ணை மீட்ட பிறகு கரைக்கு வந்த இளைஞர், தனது ஆடைகளை எடுத்தபோது அதிர்ச்சியடைந்தார். அவர் வைத்திருந்த ஆண்ட்ராய்டு மொபைல் போனும், ரூ.800 பணமும் காணாமல் போயிருந்தன. ஆபத்தில் இருந்த ஒருவரை காப்பாற்றுவதற்காக அவர் தண்ணீரில் இறங்கிய நேரத்தில், அவரது உடைமைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
துணிச்சலுக்கு பாராட்டு
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்றிய அந்த எளிய தொழிலாளியின் துணிச்சலும் மனிதநேயமும் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உதவிக்காக ஒருவர் தண்ணீரில் போராடிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்த அவரது பொருட்களை திருடிச் சென்ற செயல் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் ஆபத்தில் இருந்தவரை காப்பாற்ற பலரும் தயங்கிய நிலையில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்ணீரில் குதித்த இளைஞரின் செயல் கவனம் பெற்றுள்ளது. மறுபுறம், அவர் உயிரைக் காப்பாற்றச் சென்ற நேரத்தை பயன்படுத்தி உடைமைகளை திருடிய செயல் மனிதநேயம் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: SBI வங்கியில் மிளகாய் பொடியை ஊழியர்கள் கண்களில் வீசி கொள்ளை...! அடுத்த 30 நிமிடத்தில் பாய்ந்த போலீஸ்.... சிக்கிய சிசிடிவி காட்சி!!!