எலியால் தனது கணவனின் ஆணுறுப்பை கடித்து துப்பிய மனைவி..! என்ன காரணம் தெரியுமா.?

கணவரின் ஆணுறுப்பை மனைவி கடித்து துப்பிய சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் கணவன் மனைவியான ஆபிரகாம் மற்றும் முகும்பா. குடிப்பழக்கம் உடைய முகும்பா சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஒரே வீட்டில் வசித்தாலும் கணவன் மனைவி இருவரும் தனித்தனி அறையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த முகும்பா தனது அறைக்குள் சென்றபோது அங்கு எலிகள் தொந்தரவு அதிகமாக இருப்பதை பார்த்துள்ளார்.
உடனே தனது கணவரிடம் சென்று தனது அறையில் உள்ள எலிகளை விரட்டும் படி கேட்டுள்ளார். ஆனால் மனைவியின் வேண்டுகோளை அவரது கணவர் நிராகரித்து விட்டதாக தெரிகிறது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென தனது கணவரின் பிறப்பு உறுப்பை கடிக்க ஆரம்பித்துள்ளார் முகும்பா. இதனால் ஆபிரகாம் வலியில் அலறி துடிக்கவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.