என்னடா இது..! பாலைவன நாட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்..!

என்னடா இது..! பாலைவன நாட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்..!



what-is-this-flooding-in-the-desert-country

பாலைவன நாடான சவுதி அரேபியாவில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இரண்டாவது பெரிய நகரமான ஜெட்டாவில் நவம்பர் மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் வடமேற்கிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உசைகர் பகுதி. இந்த உசைகர் பகுதியில் கனமழை பெய்ததால் அங்குள்ள ஒரு பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது