உயிருடன் வருவதற்கு அவர் என்ன "கடவுளா"... பிரபாகரன் குறித்து கோத்தபய ராஜபக்சே கருத்து ...!!

உயிருடன் வருவதற்கு அவர் என்ன "கடவுளா"... பிரபாகரன் குறித்து கோத்தபய ராஜபக்சே கருத்து ...!!


What "god" is he to come alive... Gotabaya Rajapakse comments on Prabhakaran...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் மனநோயாளிகள் என கோத்தபய ராஜபக்சே கூறி உள்ளார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். இந்த தகவலுக்கு உடனடியாக இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்தது. 

இதுதொடர்பாக கோத்தபய ராஜபக்சே கூறுகையில், பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் மனநோயாளியாக தான் இருப்பார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ஆம் ஆண்டே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் என அனைவரும் இறுதி போரில் உயிரிழந்துவிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய நினைக்கின்றனர்.  

இந்த மாதிரியானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள் தனமான செயல். உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன "கடவுளா" ?.. என முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.