வெடித்து சிதறிய எரிமலையால் நீடிக்கும் பதற்றம்!.. 2 லட்சம் பேருக்கு எச்சரிக்கை விடுத்த புவியியல் ஆய்வு மையம்..!

வெடித்து சிதறிய எரிமலையால் நீடிக்கும் பதற்றம்!.. 2 லட்சம் பேருக்கு எச்சரிக்கை விடுத்த புவியியல் ஆய்வு மையம்..!



The world's largest volcano in America has erupted after 38 years

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது. ஹவாய் தீவில் உள்ள 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி இருக்கும் ஹவாய் தீவில் உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா உள்ளது. 38 வருடங்களுக்கு பிறகு இந்த எரிமைலை வெடித்துள்ளது. மிகபெரிய நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எரிமலை வெடித்ததை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருவதாகவும், அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாகவே முடிவதால், அது குறித்து அச்சுறுத்தல் இப்போதைக்கு இல்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் அதனால் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் எனவும் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

எனவே, எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் வர தொடங்கினால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வெளியேற தயாராக இருக்குமாறு ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 1843-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா எரிமலை கடைசியாக,1984-ஆம் வருடத்தில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.