ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கரமான காட்டு தீ... 36 பேர் பரிதாப பலி.!

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கரமான காட்டு தீ... 36 பேர் பரிதாப பலி.!



terrible-forest-fire-in-hawaii-36-people-died

அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 36 பேர் உடல் கருகியும் நீரில் மூழ்கியும் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது உலகின் பல பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலும் வெப்பநிலை அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக அநேகமான நாடுகளில் காட்டு தீ ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

worldஇந்நிலையில் ஹவாய் தீவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ  குடியிருப்புகளுக்கும் பரவியது. இதனால் வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகின. இந்தக் காட்டுத் தீயில் இருந்து  தப்பிப்பதற்காக ஏராளமான கடலில்  குதித்தனர்.

world இந்த பயங்கரமான காட்டுத் தீயில்  கருகியும் கடலில் மூழ்கியும் இதுவரை 36 பேர் ஹவாய் தீவில் மரணமடைந்ததாக  அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவில் 200 ஏக்கருக்கும் அதிகமான மரங்கள் காட்டுத்  தீயினால் நாசம் அடைந்திருக்கிறது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.