பாகிஸ்தானின் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை.!

பாகிஸ்தானின் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை.!



pakistan terarist leader mazuth azar - block list

புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் இன்று உலக நாடுகள் சில ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. 

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை ஓரம், மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது சுமார் 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசி பதறவைக்கும் பதிலடி கொடுத்துள்ளது. 

India

இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் அவன் உலக அளவில் பயணம் செய்யவும் உலக நாடுகளுடன் ஆயுதங்கள் விற்பதை வாங்குவதை தடுக்கவும் அவனது சொத்துக்களை முடக்கவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.