பாகிஸ்தானை பிச்சைக்காரன் போல பார்க்கும் நட்பு நாடுகள் - அந்நாட்டு பிரதமர் மக்களிடம் வேதனை..!

பாகிஸ்தானை பிச்சைக்காரன் போல பார்க்கும் நட்பு நாடுகள் - அந்நாட்டு பிரதமர் மக்களிடம் வேதனை..!



pakistan-prime-minister-sad-speech-about-pak-begging

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப், "கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்களின் ஆட்சிக்கு முன்பில் இருந்தே பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது.

நமது ஆட்சிக்கு பின்னர் பொருளாதார நெருக்கடி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கிறது. சிறிய அளவிலான நாடுகள் கூட நம்மை பொருளாதாரத்தில் வீழ்த்திவிட்டது. 

நாம் கடந்த 75 ஆண்டுகள் பிச்சை கிண்ணத்தினை சுமந்து அழைத்துக்கொண்டு இருக்கிறோம். எந்த நட்பு நாட்டுக்கு பாகிஸ்தானில் இருந்து சென்றால் அல்லது தொலைபேசியில் பேசினால் நம்மை பிச்சை எடுக்கும் நபரை போலவே பார்க்கிறார்கள்" என்று கூறினார்.