கலிகாலம்டா சாமி.. 83 வயது பாட்டியை கூட விட்டுவைக்காமல் 14 வயது சிறுவன் செய்த செயல், பின் நடந்த கொடூரம்.!

கலிகாலம்டா சாமி.. 83 வயது பாட்டியை கூட விட்டுவைக்காமல் 14 வயது சிறுவன் செய்த செயல், பின் நடந்த கொடூரம்.!



old women raped and killed by 14 year boy

உலகில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே  வருகிறது. மேலும் பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை அணைத்து  பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க நாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன், 83 வயது மூதாட்டியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள 'பால்டி மோர்' என்ற நகரை சேர்ந்தவர் மூதாட்டி டோரோதிமயே நீல். 83  வயதான இந்த மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

old women

இந்நிலையில், அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த 14 வயது சிறுவன் ஒருவன், அந்த மூதாட்டியை கற்பழித்து உள்ளான். பின் அந்த பாட்டியை ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

பின் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். மறுநாள் காலை அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக  மருத்துமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை செய்த போலீசார் அந்த சிறுவனை கைது செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.