தெருவில் இருக்கும் நாயை கொஞ்சக்கூடாது ஏன்?.. ஆகச்சிறந்த அதிர்ச்சி வீடியோ வைரல்..!

தெருவில் இருக்கும் நாயை கொஞ்சக்கூடாது ஏன்?.. ஆகச்சிறந்த அதிர்ச்சி வீடியோ வைரல்..!



Never approach an animal that you don't know 

 

வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் எப்போதும் நம்மோடு விளையாடுபவை. நாய், பூனை போன்றவற்றை நாம் தெருவில் பார்த்தாலும் அழகுற இருக்கும் அவைகளை கொஞ்சுவோம். 

ஆனால், அதில் அடங்கியுள்ள ஆபத்து என்பது நமக்கு தெரியாது. ஏனெனில், பெரும்பாலான நாய்கள் அதற்கு சோறு வைப்போருக்கு விசுவாசமாக இருக்கும். ஒருசில நேரம் அவைகளுக்கு வெறிபிடித்தால் அதுவும் தெரியாது. 

இந்நிலையில், சாலையோரம் இருந்த நாயை கொஞ்சுவதற்கு தாய்-மகளாக இருவர் சென்றுள்ளனர். அப்போது, அமைதியாக இருந்த நாய், திடீரென ஆவேசமாகி தாயை தாக்கியது. 

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் நாயின் உரிமையாளர் விரைந்து வந்து பெண்ணை காப்பாற்றினார். இந்த பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது.