கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?



man-shocked-after-opened-the-door-after-login-time

உலகின் பல்வேறு மூலைகளில் தினம் தினம் ஏதாவது ஒரு அதிசயம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் டெக்ஸாசில் உள்ள அல்பனி என்ற பகுதியில் வசித்துவந்த அமெரிக்கர் ஒருவருக்கு சற்றும் எதிர்பாராத விதத்தில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அதாவது அமெரிக்காவில் உள்ள டெக்ஸாசில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் அல்பனி. அவர் குடியிருக்கும் வீடானது மேல்தளம், கீழ்தளம் என இரண்டாக இருந்துள்ளது. மேல்தளத்தில் வசித்துவந்த அல்பனி கீழ்தளத்தை நீண்ட காலமாக பயன்படுத்தாமலும், அதை பார்வையிடாமலும் இருந்துள்ளார்.

World news

சில நாட்களுக்கு முன்னர் ஏதோ பழுது பார்ப்பதற்காக கீழ் தளத்திற்கு சென்றுள்ளார் அல்பனி. கீழ்தளத்தை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழ்தளத்தில் கொடிய விஷமுடைய பாம்புகள் அங்கே இருந்துள்ளது.

உடனே பாம்பு பிடிக்கும் குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளார் அல்பனி. உடனே அந்த இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் சுமார் 45 க்கும் மேற்பட்ட கொடிய விஷமுடைய பாம்புகளை பிடித்துள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அல்பனி. இதோ அந்த வீடியோ.