பிறப்புறுப்பில் நகக்கீறல், மார்பை அறுத்து வீசி நடந்த பயங்கரம்: பெண்களை பாலியல் சித்ரவதை செய்து கொன்ற ஹமாஸ்.!

பிறப்புறுப்பில் நகக்கீறல், மார்பை அறுத்து வீசி நடந்த பயங்கரம்: பெண்களை பாலியல் சித்ரவதை செய்து கொன்ற ஹமாஸ்.!



isreal-womens-sexually-assaulted

 

இஸ்ரேல் நாட்டை எதிர்த்து கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களின் தாக்குதலை முன்னெடுத்தனர். போரின் தொடக்கத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணில் படுவோரை எல்லாம் சுட்டுத்தள்ளி கொலை செய்தனர்.

மேலும் வீடுவீடாக சென்று இஸ்ரேலிய மக்களின் தலையை துண்டித்து வீட்டின் அருகில் வைத்து சென்றனர். களத்தில் இஸ்ரேல் தனது முழு ராணுவத்தையும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது பாலஸ்தீனிய மக்களும், ஹமாஸ் பயங்கரவாதிகளும் அழிவின் விளிம்பு நிலையில் இருக்கின்றனர்.

ஹமாஸ் எடுத்த தவறான முடிவு அவர்கள் பாதுகாத்து வந்த பாலஸ்தீனிய மக்களையும் சேர்த்து பாதித்துள்ளது. போரின் தொடக்கத்தில் மக்களை பிணைய கைதியாக பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது. புகழ்பெற்ற அமெரிக்காவின் நியூவாக் டைம்ஸ் செய்தி நிறுவனம் இது தொடர்பாக மேற்கொண்டு வந்த ஆய்வில், தற்போது அதிர்ச்சி தகவல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Isreal

பெண்கள் மற்றும் ஆண்களை பாலியல் ரீதியான வன்மத்துடன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இறந்த பெண்களின் சடலங்களை ஆய்வு செய்தபோது, பெண்களின் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் ஆழமான நகக்கீரல்கள், காயங்கள் போன்றவை இருந்துள்ளன. அதேபோல ஹமாசின் பிடியில் சிக்கி உயிரிழந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆணுறுப்பில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தகவல்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பாலியல் ரீதியான வன்முறையை கொடூரமாக பெண்களுக்கு இழைத்து, இவர்களின் பிடியில் சிக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவரே மார்பை வெட்டி வீதியில் வீசி கொடூரமாக நடந்த ரண கொலைகளும் தெரியவந்துள்ளன.