இனி அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை.. அரசு அதிரடி உத்தரவு.!

இனி அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை.. அரசு அதிரடி உத்தரவு.!



iPhone not allowed in China

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் போன்றவை உலக  மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

china

அதன்படி சீனாவிலும் ஐபோனை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஐபோனின் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தை குறித்து, தங்கள் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி ஐ போன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள சாதனங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த கூடாது என சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

china

இதற்கு காரணம் சீனாவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையின் எதிரொலி தான் என கூறப்படுகிறது. இது குறித்து சீன அதிகாரிகளுடன் கலந்துசிக்க விரும்பவில்லை என அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.