சுத்தியலால் 50 முறை இந்திய கல்லூரி மாணவர் அடித்து கொலை; அதிர்ச்சி சம்பவம்.!

சுத்தியலால் 50 முறை இந்திய கல்லூரி மாணவர் அடித்து கொலை; அதிர்ச்சி சம்பவம்.!



in US Indian Student Killed by Man

 

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜ்யா மாகாணம், ஸ்னாப் பிங்கர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்தவாறு, கல்லூரியில் பயின்று வந்த இந்திய மாணவர் விவேக் சைனி (25). 

இவர் சம்பவத்தன்று தனது கடையில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 53 வயது நபரால் சுத்தியால் அடித்தே கொலை செய்யப்பட்டார். 

சில நிமிடங்களுக்குள் மர்ம நபர் கொலை வெறியுடன் நடத்திய தாக்குதலில், விவேக்கின் மீது 50 முறை அடுத்தடுத்து சுத்தியால் தடம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சைனி உயிரிழந்தார். 

அவரது கொடூர மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமெரிக்க அதிகாரிகள், அந்நிறுவனத்தில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றனர்.

குற்றவாளி Julian Faulkner காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.