அழகான மணமகள்!! சட்டைகூட இல்லாமல் அருகில் இருந்த மாப்பிளை!! உண்மை தெரிந்ததும் நெட்டிசன்கள் கவலை..

அழகான மணமகள்!! சட்டைகூட இல்லாமல் அருகில் இருந்த மாப்பிளை!! உண்மை தெரிந்ததும் நெட்டிசன்கள் கவலை..


groom-not-wears-short-to-his-wedding-here-is-why

தனது திருமணத்தின்போது மாப்பிளை சட்டை கூட அணியாமல் உடலெங்கும் காயங்களுடன் இருந்த புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.

இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவாவில் வசிக்கும் சுப்ராப்டோ என்பவருக்கும் எலிண்டா டிவி கிறிஷ்டியானி என்ற பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது மணப்பெண் அழகான உடை, மேக்கப் போட்டு, ஆபரண நகைகளுடன் தேவதை போல் வந்து மணப்பேட்டையில் உட்கார்ந்தார்.

ஆனால் மாப்பிளையோ உடலெங்கும் காயம், கட்டுகளுடன் உடலில் சட்டைகூட போடாமல் அரைக்கால் டவுசருடன் அமர்ந்திருந்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Viral News

மாப்பிளை ஏன் இப்படி இருக்கிறார் என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டனர். பலரும் மணமகனின் தோற்றத்தையும், அவரது கெட்டப்பையும் பார்த்து நக்கலாகவும் கமெண்ட் செய்தனர். சிலர் இது அவர்களின் பாரம்பரிய நடைமுறையாக கூட இருக்கலாம் என கூறினர். ஆனால் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளார் அந்த மணப்பெண்.

அதவாது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மணமகன் பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் பங்கிற்கு சென்றதாகவும், பெட்ரோல் வாங்கி வரும்போது ஏற்பட்ட தீ விபத்தில் அவரது உடலெங்கும் காயம் ஏற்பட்டதால் அவரது உடலில் கட்டு போடப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரால் சட்டை அணியமுடியவில்லை எனவும், விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.