வீதியில் இறங்கி போராடும் மக்கள்!.. 3 ஆம் உலகப்போரை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு..!

வீதியில் இறங்கி போராடும் மக்கள்!.. 3 ஆம் உலகப்போரை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு..!



French people took to the streets to protest France's supply of arms to Ukraine

உக்ரைன் நாட்டிற்கு பிரான்ஸ் ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால்,  ரஷியா உக்ரைன் மீது போரை தொடங்கி ஓரு வருடம் கடந்த நிலையில், போர் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. போர் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

உக்ரைன்-ரஷியா போர் ஓரு வருடத்தை கடந்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் போராட தொடங்கி உள்ளனர். 

அந்த வகையில் பிரான்சில் நேற்று தலைநகர் பாரீஸ் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து போராடினா். மேலும் பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.

அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தி, போர் வேண்டாம், அமைதி வேண்டும், மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம், ‌நேட்டோவை விட்டு வெளியேறு, போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை சுமந்தபடி பேரணியாக சென்றனர்.

இந்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்த பிரான்சின் மூத்த அரசியல்வாதியான புளோரியன் பிலிப்பாட் கூறுகையில், உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் ஆயுதங்கள் அனைவரையும் மூன்றாம் உலகப்போருக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லும். போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஜப்பான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து அந்த நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று, பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியதில், 76 சதவீதம் பேர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கடுமையாக எதிர்ப்பதாக கூறியுள்ளனர்.

16 சதவீதம் பேர் மட்டுமே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரித்தனர். அதே நேரம் உக்ரைனுக்கு பொதுஉதவிகள் வழங்ககுவதற்கு 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.