13 பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை.! பெற்றோர் மகிழ்ச்சி.!

13 பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை.! பெற்றோர் மகிழ்ச்சி.!



death-penalty-for-teacher-who-molested-13-schoolgirls

இந்தோனேசியாவில் பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‌

இந்தோனேசியாவில் இஸ்லாமிய பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஹெர்ரி வைரவனின் வழக்கு இந்தோனேசியாவை திகைக்க வைத்துள்ளது. குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் ஹெர்ரி வைரவனுக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், அவருக்கு மரண தண்டனை வழங்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் பாண்டுங்கில் உள்ள நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஐந்து ஆண்­டு­களில், 13 மாண­வி­க­ளைப் பாலி­யல் வன்புணர்வு செய்த 36 வயது ஹெரி வைரவனால்  அந்த மாண­வி­களில், குறைந்­தது எட்டு பேர் கருவுற்­றி­ந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

வழக்­க­றி­ஞர்­க­ளின் மேல் முறை­யீட்டை ஏற்­றுக்­கொண்ட பாண்­டுங் நீதி­மன்­றம் குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை விதித்து உத்தரவிட்டது. நீதி­மன்­றத்­தின் இந்த உத்­த­ர­வால் தங்­க­ளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக பாதிக்­கப்­பட்ட மாணவிக­ளின் பெற்­றோர் தெரிவித்துள்ளனர்.