BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அய்யோ.. தண்ணீரில் மூழ்கிய பெண்! காலில் துணியை கட்டி தலைகீழாக தொங்கி காப்பாற்றும் வாலிபர்! இறுதியில் நடந்த ட்விஸ்டை பாருங்க! வைரல் வீடியோ...
சமூக ஊடகங்களில் புகழையும் பார்வைகளையும் பெற பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதால், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் பீஹாரின் சப்ரா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வைரல் வீடியோ இதற்கு சாட்சியாக மாறியுள்ளது.
சப்ராவில் அதிர்ச்சியூட்டும் காட்சி
இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஆற்றுப் பாலத்தில் தலைகீழாக தொங்க, கீழே ஒரு பெண் நீரில் மூழ்குவது போல் நடிக்கிறார். பார்ப்பவர்களுக்கு உண்மையான மீட்பு நிகழ்வைப் போல தோன்றிய இது, பின்னர் வெறும் ‘ரீல்’ படம் எடுப்பதற்காக செய்யப்பட்ட நாடகம் என்பதை வெளிச்சம் போட்டது.
சமூக ஊடக விமர்சனங்கள்
@ChapraZila என்ற X கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. “உயிரை ஆபத்தில் போட்டு ரீல்ஸ் எடுப்பது தவறான முன்மாதிரி,” என பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “படைப்பாற்றல் என்றால் ஆபத்து இல்லை” என்று வலியுறுத்தும் கருத்துகளும் பெருமளவில் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: பார்க்கும்போதே பதறுதே! சிங்கத்தின் கூண்டில் சிக்கிய வாலிபர்! ஒரு சிங்கம் கையை பிடிக்க இன்னொரு சிங்கம் காலை பிடித்து..... பகீர் வீடியோ!
இளைஞர்களுக்கு எச்சரிக்கை
இன்றைய சூழலில் குறுகிய வீடியோக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உயிருக்கு ஆபத்தான செயல்களை பின்பற்றுவதை வல்லுநர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். இத்தகைய ஆபத்தான செயல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல் அவசியம் என்றாலும், பாதுகாப்பை மீறி செய்யப்படும் முயற்சிகள் சமூகத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.
वीडियो बनाने के लिए इतना रिस्क ले रहे है आजकल के युवा 😱 pic.twitter.com/HNy5NfcqhZ
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 15, 2025
இதையும் படிங்க: சூப்பர் பவர் மேன்! மின்கம்பத்தில் தலைகீழாக சரசரவென ஏறிய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..,.