பாகிஸ்தான்: கடும் வெயில் தாக்கம் தாங்காமல் பறவைகள், விலங்குகள் திண்டாட்டம்..!

பாகிஸ்தான்: கடும் வெயில் தாக்கம் தாங்காமல் பறவைகள், விலங்குகள் திண்டாட்டம்..!


birds-and-animals-are-struggling-due-to-summer-in-pakis

பாகிஸ்தானில் லாகூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் கோடை வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றன.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் கோடை வெயிலின் வெப்பம் வீசி வருகிறது. வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்கு வகைகள் மற்றும் வாத்து கொக்கு புறா உள்ளிட்ட பறவை இனங்களை காக்க நீர் காற்றாடி மற்றும் தண்ணீர் தெளிப்பான்களை மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் பொருத்தியுள்ளனர்.

மேலும் கோடை வெப்பத்திலிருந்து மற்ற உயிரினங்களையும் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.