5 வது மாடியில் இருந்து தவறிவிழுந்த குழந்தை!! துடிதுடித்து கதறிய தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்!!

5 வது மாடியில் இருந்து தவறிவிழுந்த குழந்தை!! துடிதுடித்து கதறிய தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்!!



baby-fallen-from-5th-floor

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் யூலியா ரோகக். இவருக்கு 11 மாதம் நிறைந்த டெமியான் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது, யூலியா வீட்டிலிருந்த பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்துள்ளார். மேலும் அப்பணியில் மும்முரமாக அவர் ஈடுபட்டு வந்த நிலையில், குழந்தை ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளான்.

 அப்போது குழந்தை நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. உடனே இதனை கண்டு பதறிப்போன யூலியா ஓடிவந்து வெளியில் எட்டி பார்த்துள்ளார். அப்பொழுது குழந்தை அதிர்ஷ்டவசமாக மூன்றாவது மாடியில் உள்ள துணி காயவைக்கும் கயிற்றில் சிக்கி கொண்டு தொங்கியுள்ளது. அப்பொழுது யூலியா குழந்தையை காப்பாற்றுமாறு அலறியுள்ளார்.

5th floor

அப்பொழுது அவ்வழியே கீழே நடந்து சென்ற இரு நபர்கள் அலறல் சத்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்பொழுது குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இதனை  கண்டு அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் வேகமாக மேலே ஏறி குழந்தையை மீட்க விரைந்துள்ளார் .மேலும் மற்றொருவர் குழந்தை கீழே விழுந்தால் அதை பிடிப்பதற்காக தயாராக நின்று கொண்டிருந்துள்ளார்.

5th floor

இந்நிலையில் யூலியா செய்வதறியாது அதிர்ச்சியில் கண்களை மூடி அப்படியே அமர்ந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் குழந்தையை மீட்டு யூலியாவிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அதிர்ச்சியிலிருந்து மீண்ட அவர் குழந்தையை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தைக்கு தலை, வயிறு மற்றும் மார்பு பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.