அந்தமான் நிகோபார் தீவுகளில் அதிபயங்கர நிலநடுக்கம் : பீதியின் அச்சத்தில் உறைந்துபோன மக்கள்..!



Andaman Nicobar Earthquake

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பது தொடர்கதையாகியுள்ளது. இன்று அதிகாலை 02:30 மணியளவில் அந்தமான் நிகோபார் தீவில் இருக்கும் கெம்ப்பெல் விரிகுடா பகுதியில் இருந்து 431 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 75 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குழுங்கவே, அதிர்ந்துபோன மக்கள் சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.

Andaman Nicobar

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், சுனாமி அறிவிப்புகள் ஏதும் இல்லை. மீட்பு பணிகள் நடந்து வருகிறது.