மகனை 8 ஆண்டுகளாக பாலியல் தேவைக்கு உபயோகப்படுத்திய தாய்; அடிமையாக வைத்து நடந்த பயங்கரம்.!

மகனை 8 ஆண்டுகளாக பாலியல் தேவைக்கு உபயோகப்படுத்திய தாய்; அடிமையாக வைத்து நடந்த பயங்கரம்.!



America Mother Cheat Son 

 

அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ரூடி பரியாஸ் (வயது 25). இவரின் தாயார் ஜானி சந்தனா. கடந்த 2015ம் ஆண்டில் தனது மகன் ரூடி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் ஜானி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே 8 ஆண்டுகளுக்கு பின் ரூடி வெளியே வர, அப்போது அவர் மாயமாகவில்லை என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சொந்த தாயால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

World news

ரூடியின் தாயார் தனது சொந்த மகனை தந்தை போல தனக்கு இருக்கும்படி வற்புறுத்த, அடிமையாக மகனை தாயே உபயோகப்படுத்தியுள்ளார். கடந்த 2015ல் ரூடி தனது வீட்டில் இருந்து வெளியேறி 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்த வாய்ப்பை தனதாக்கிய தாய், இந்த தகவலை வெளியே கூறினால் சிறைக்கு நீ செல்லவேண்டி இருக்கும். அதனால் நான் சொல்வதை கேள் என கூறி மிரட்டி அடிமையாக வைத்துள்ளார். படுக்கையில் தந்தையை போல நீ இருக்க வேண்டும் என போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார்.